நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இரங்கும் இரங்கும் கருணை வாரி

Irangum Irangum Karunnai Vaari

Sirkali Yesuprakasam

இரங்கும் இரங்கும் கருணை வாரி

இயேசு ராஜனே அவர் நாச நேசனே

அவர் நாச நேசனே

திறங்கொண்டாவி வரங்கொண்டு உய்ய

சிறுமை பாரய்யா ஏழை

வறுமை தீரய்யா ஏழை

வறுமை தீரய்யா

தீமை அன்றி வாய்மை செய்ய

தெளிகிறேன் அய்யா

தெளிவை புரிகிலேன் அய்யா

பாவியேற்று கவி மன்றாட்டை

பரிந்து கேளய்யா தயை

புரிந்து மீளய்யா… தயை

புரிந்து மீளய்யா…

– இரங்கும்

அடியேன் பாவ கடி விஷத்தால்

அயர்ந்து போகின்றேன் மிக

பயந்து சாகின்றேன்

பாவியேற்று ஜெபமன்றாட்டை

பரிந்து கேளய்யா தயை

புரிந்து மீளய்யா… தயை

புரிந்து மீளய்யா

– இரங்கும்