பாடல்
இந்த நாள் வரை என்னைக் காத்திட்ட
Intha Naal Varai Ennaik Kaaththitta
Thomas Prithvi
இந்த நாள் வரை என்னைக்
காத்திட்ட எந்தன் கன்மலை நீரே
இப்போதும் எப்போதும் என்னை
சுமக்கும் தகப்பன் நீரே
உம்மைத் துதிக்கிறேன் அல்லேலூயா
உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
நீர் நல்லவர் அல்லேலூயா நீர்
மிகவும் நல்லவர்
உண்மையில்லா திருந்தேன்
என்னைத் தூக்கி சுமந்தீரே
பாவங்களை மன்னித்து
மகிழ்ச்சியாய் மறந்தீரே
– உம்மைத்
ஒன்றுமில்லா திருந்தேன்
நிறைத்தீர் உம் ஐஸ்வர்யத்தால்
தேவைகளை சந்தித்து
மீதம் எடுக்க வைத்தீர்
– உம்மைத்
வியாதியாய் இருந்தேன்
குணமானேன் தழும்புகளால்
வார்த்தையை அனுப்பி என்னை
வாழவைத்தீரே
– உம்மைத்