பாடல்
இகபரமதிலே அகபரன் அவரை
Ikaparamathilae Akaparan Avarai
Moses Rajasekar
இகபரமதிலே அகபரன் அவரை
துதிக்க வைத்தால் ஸ்தோத்திரம்
அற்ப நாவிலே அற்புதர் அவரை
பாட வைத்தால் ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம்– 4
பார்வோன் சேனையை கடலில் மூழ்கடித்த
தேவாதி தேவனைத் துதியுங்கள்
எரிகோ கோட்டையை இடித்து தகர்த்திய
ராஜாதி இராஜனைத் துதியுங்கள்
– அல்லேலூயா – 2
அக்கினி நடுவிலேயே உலாவி தம்மை
வெளிப்படுத்தினவரை துதியுங்கள்
தண்ணீரின் மேலே நடந்த அற்புதர்
இயேசுராஜனைத் துதியுங்கள்
வார்த்தையினாலே அகிலம் படைத்த
அநாதி தேவனை துதியுங்கள்
மண்ணினாலே மனிதனைப் படைத்த
மன்னாதி மன்னனைத் துதியுங்கள்
– அல்லேலூயா – 2