நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எந்தன் இயேசுவின் அன்பதையே

Enthan Yesuvin Anpathaiyae

எந்தன் இயேசுவின் அன்பதையே

எண்ணும் வேளையில் ஆனந்தமே

கடந்த நாட்களில் கைவிடாமலே

கண்ணின் மணிபோல் காத்ததினால்

மனப்பூர்வமாய் துதிப்பேன் மகிழ்வுடனே

மன்னன் கிறிஸ்தேசுவையே

– எந்தன்

அழைத்த பாதையில் தளர்ந்த வேளையில்

அன்பின் மொழியால் பேசினாரே

புது ஜீவனும் நிறைவாய் அளித்ததினால்

புண்ணியனைப் போற்றிடுவேன்

– எந்தன்

வறுமை வியாதியின் வலிய தோல்வியும்

வந்த வேளையில் தாங்கினாரே

ஜெய கீதமே தினமும் எவ்வேளையிலும்

ஜெயத்துடன் பாடிடுவேன்

– எந்தன்

நெகிழ்ந்த கரங்களை உயிர்த்து இதுவரை

இழந்த வரங்களும் ஈந்ததினால்

அவர் சேவையை புரிந்து கனம் மகிமை

அவருக்கே செலுத்திடுவேன்

– எந்தன்

நிறைந்த ஜோதியாய் திறந்த வானிலே

நீதி சூரியன் தோன்றிடுவார்

மறுரூபமே அடைந்தே பறந்திடுவேன்

மட்டற்ற பேரின்பமுடன்

– எந்தன்