நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எந்தன் பூமானைக் காண

Enthan Poomaanaik Kaana

எந்தன் பூமானைக் காண

சிந்தை பொருகுதையோ

என்றைக்கு காண்பேனோ ஓ…. ஓ….

சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திருக்கும்

எந்தன் பூமானைக்காண – அழகுடைய

அண்ணல் இயேசுவைக் காண ஓ…

– எந்தன்

விண்ணிலிருந்தவர் மண்ணீன் மேல்

வந்தவர் கன்னிகையிற் பிறந்தவர்

லாசருக்காகக் கண்ணீரை விட்டழுதவர்

– எந்தன்

இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ

சொன்ன வாக்கை நினைத்து – அடியேன்

உந்தன் பாதம் பணிந்து வந்தேன்

– எந்தன்

பொல்லாதோரை இரட்சிக்க வல்ல

பராபரன் என்ன துயரடைந்தார் – அதை

நினைத்தால் சொல்ல முடிவதில்லை

– எந்தன்

பாதகரின் அடி கன்னத்தில் படும் வேளை

என்னை நினைத்தீரே நீர் – அதை

நினைத்தால் உம்மை மறப்பேனோ நான்

– எந்தன்