நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என்னையாளும் இன்ப நாதனே

Ennaiyaalum Inpa Naathanae

Sirkali Yesuprakasam

என்னையாளும் இன்ப நாதனே என்

இயேசு மணாளனே – 3

துணையாரும் இல்லை என்று

மனம் நொந்து போனேன்

துணையாக வந்து தோள் தந்து என்னை

மீட்ட தேவனே – என்னையாளும்

மனம் நொந்து வாடினேன் திரு பாதம் தேடினேன்

தினம் கண்ணீர் சிந்தினேன் முழங்காலில் தங்கினேன்

அழும் என்னை தேடி வந்து அணைத்து அன்பில் ஆழ்த்தினார்

புழு என்னை தொட்டு தன் போல் புது ரூபம் ஆக்கினார்

– என்னையாளும்

கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்

முரடான காடுகள் முள் கல் பாதைகள்

அவமான நிந்தைகள் எவை வந்த போதிலும்

இது எந்தன் பாக்கியம் என சொன்ன இயேசுவே

– என்னையாளும்

கடன்காரன் ஆனதால் உடன் வந்த பாடுகள்

இடம் மாறி போயினும் தடுமாற செய்திடும்

தடுமாறும் கால்கள் உம் முன் தள்ளாடலாகுமா

தள்ளாடும் என்னை தாங்கி நில் என்ற இயேசுவே

– என்னையாளும்