பாடல்
என்னையாளும் இன்ப நாதனே
Ennaiyaalum Inpa Naathanae
Sirkali Yesuprakasam
என்னையாளும் இன்ப நாதனே என்
இயேசு மணாளனே – 3
துணையாரும் இல்லை என்று
மனம் நொந்து போனேன்
துணையாக வந்து தோள் தந்து என்னை
மீட்ட தேவனே – என்னையாளும்
மனம் நொந்து வாடினேன் திரு பாதம் தேடினேன்
தினம் கண்ணீர் சிந்தினேன் முழங்காலில் தங்கினேன்
அழும் என்னை தேடி வந்து அணைத்து அன்பில் ஆழ்த்தினார்
புழு என்னை தொட்டு தன் போல் புது ரூபம் ஆக்கினார்
– என்னையாளும்
கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
முரடான காடுகள் முள் கல் பாதைகள்
அவமான நிந்தைகள் எவை வந்த போதிலும்
இது எந்தன் பாக்கியம் என சொன்ன இயேசுவே
– என்னையாளும்
கடன்காரன் ஆனதால் உடன் வந்த பாடுகள்
இடம் மாறி போயினும் தடுமாற செய்திடும்
தடுமாறும் கால்கள் உம் முன் தள்ளாடலாகுமா
தள்ளாடும் என்னை தாங்கி நில் என்ற இயேசுவே
– என்னையாளும்