பாடல்
என்னைத் தேடி இயேசு வந்தார்
Ennaith Thaeti Yesu Vanthaar
Fr. S. J. Berchmans
என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்
மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்
– என்னைத் தேடி
ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும்
ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்
– என்னைத் தேடி
சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின்
காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
– என்னைத் தேடி
தெரிந்துகொண்டார் என்னை
தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ
– என்னைத் தேடி