பாடல்
எனக்கொத்தாசை வரும் பர்வதம்
Enakkoththaasai Varum Parvatham
எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்
– எனக்கொத்தாசை
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே
– எனக்கொத்தாசை
என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
ராப்பகல் உறங்காரே
– எனக்கொத்தாசை
வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே
– எனக்கொத்தாசை
எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்
– எனக்கொத்தாசை