நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எனக்கொத்தாசை வரும் பர்வதம்

Enakkoththaasai Varum Parvatham

எனக்கொத்தாசை வரும் பர்வதம்

நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்

வானமும் பூமியும் படைத்த

வல்ல தேவனிடமிருந்தே

எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே

என் கண்கள் ஏறெடுப்பேன்

– எனக்கொத்தாசை

மலைகள் பெயர்ந்தகன்றிடினும்

நிலைமாறி புவியகன்றிடினும்

மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்

ஆறுதல் எனக்கவரே

– எனக்கொத்தாசை

என் காலைத் தள்ளாட வொட்டார்

என்னைக் காக்கும் தேவன் உறங்கார்

இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்

ராப்பகல் உறங்காரே

– எனக்கொத்தாசை

வலப்பக்கத்தில் நிழல் அவரே

வழுவாமல் காப்பவர் அவரே

சூரியன் பகலில் சந்திரன் இரவில்

சேதப்படுத்தாதே

– எனக்கொத்தாசை

எத்தீங்கும் என்னை அணுகாமல்

ஆத்துமாவைக் காக்குமென் தேவன்

போக்கையும் வரத்தையும் பத்திரமாக

காப்பாரே இது முதலாய்

– எனக்கொத்தாசை