பாடல்
எனக்காக யாரும் இல்லை என்று ஏங்கும்
Enakkaaka Yaarum Illai Entu Aengum
Sirkali Yesuprakasam
எனக்காக யாரும் இல்லை
என்று ஏங்கும் உனக்காக
இயேசு உலகில் வந்தாரே
உலகில் வந்தாரே
பெற்ற பிள்ளை பாசம் அற்ற
பிள்ளை ஆச்சோ உற்ற சொந்தம்
யாவும் உன்னை விலகி போச்சோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் இயேசு காப்பாரே
– எனக்காக
கண் நிறைந்த கணவரால்
இன்று கண்ணீர் பெருகலாச்சோ
மனம் கவர்ந்த மனைவியால் இன்று
மன நிம்மதி போச்சோ
மயங்காதே கலங்காதே
மன்னன் இயேசு காப்பாரே
– எனக்காக
நாடி வந்த நண்பர் கூட்டம்
ஓடி ஒழியலாச்சோ
நம்பி வந்த மாந்தரெல்லாம்
நழுவி மறையலாச்சோ
நடுங்காதே கலங்காதே
நாதன் இயேசு காப்பாரே
– எனக்காக