நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எனக்காக யாரும் இல்லை என்று ஏங்கும்

Enakkaaka Yaarum Illai Entu Aengum

Sirkali Yesuprakasam

எனக்காக யாரும் இல்லை

என்று ஏங்கும் உனக்காக

இயேசு உலகில் வந்தாரே

உலகில் வந்தாரே

பெற்ற பிள்ளை பாசம் அற்ற

பிள்ளை ஆச்சோ உற்ற சொந்தம்

யாவும் உன்னை விலகி போச்சோ

கலங்காதே திகையாதே

கர்த்தர் இயேசு காப்பாரே

– எனக்காக

கண் நிறைந்த கணவரால்

இன்று கண்ணீர் பெருகலாச்சோ

மனம் கவர்ந்த மனைவியால் இன்று

மன நிம்மதி போச்சோ

மயங்காதே கலங்காதே

மன்னன் இயேசு காப்பாரே

– எனக்காக

நாடி வந்த நண்பர் கூட்டம்

ஓடி ஒழியலாச்சோ

நம்பி வந்த மாந்தரெல்லாம்

நழுவி மறையலாச்சோ

நடுங்காதே கலங்காதே

நாதன் இயேசு காப்பாரே

– எனக்காக