பாடல்
என் தலையெல்லாம் தண்ணீராகணும்
En Thalaiyellaam Thannnneeraakanum
Chandrasekaran
என் தலையெல்லாம்
தண்ணீராகணும்
என் கண்கள் எல்லாம்
கண்ணீராகணும்
நான் கதறி ஜெபித்திட
கண்ணீரோடு ஜெபித்திட – 2
கழுதைக்கூட தன்
எஜமானனை அறியும் என்
தேசத்தின் ஜனங்கள் உம்மை
மறந்தார்களே – 2
இதோ அழியும் என் ஜனங்களுக்காய்
தினம் அழுது ஜெபிக்கணுமே – 2
– என் தலை
தேடிச் சென்றேன் ஒருவனை தேசம்
எங்கும் திறப்பில் நிற்க ஒருவனை
காணேன் என்றீர் – 2
இதோ அடியேன் நான் இருக்கின்றேன்
ஜெப ஆவியை ஊற்றிடுமே – 2
– என் தலை
தேசமெல்லாம் இரத்த வெள்ளம்
கண்டு என் ஜனங்கள் சிதறி
சிறையானார்கள் – 2
ஐயோ அழகான என் தேசமே
நீ அலங்கோலமானது ஏன் – 2
– என் தலை