நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் பாரங்கள் தாங்கிடுவார்

En Paarangal Thaangiduvaar

Prakasikkum Sudargal

என் பாரங்கள் தாங்கிடுவார்

நாதா நீரல்லால் யாருமில்லை

என் ஜீவியம் உம் கையிலே

உம்பாண்டமாய் என்னை மாற்றிடுமே

நாதா நீரல்லால் யாருமில்லை

– என் பாரங்கள்

காலம் கடந்திடுதே

ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே

நாதா உம்மையே பின் செல்லவே

கிருபை வரம் தாருமே

நாதா நீரல்லால் யாருமில்லை

– என் பாரங்கள்

மாய உலகினிலே

ஓடி அலைந்து நான் தவிக்கையிலே

நாதா உந்தனின் கிருபை தந்து

அனுதினம் நடத்திடுமே

நாதா நீரல்லால் யாருமில்லை

– என் பாரங்கள்

சோர்ந்திடும் வேளையிலே

சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே

நாதா உந்தனின் பெலனைத் தந்து

தினந்தோறும் காத்திடுமே

நாதா நீரல்லால் யாருமில்லை

– என் பாரங்கள்