பாடல்
என் பாரங்கள் தாங்கிடுவார்
En Paarangal Thaangiduvaar
Prakasikkum Sudargal
என் பாரங்கள் தாங்கிடுவார்
நாதா நீரல்லால் யாருமில்லை
என் ஜீவியம் உம் கையிலே
உம்பாண்டமாய் என்னை மாற்றிடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை
– என் பாரங்கள்
காலம் கடந்திடுதே
ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே
நாதா உம்மையே பின் செல்லவே
கிருபை வரம் தாருமே
நாதா நீரல்லால் யாருமில்லை
– என் பாரங்கள்
மாய உலகினிலே
ஓடி அலைந்து நான் தவிக்கையிலே
நாதா உந்தனின் கிருபை தந்து
அனுதினம் நடத்திடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை
– என் பாரங்கள்
சோர்ந்திடும் வேளையிலே
சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே
நாதா உந்தனின் பெலனைத் தந்து
தினந்தோறும் காத்திடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை
– என் பாரங்கள்