பாடல்
என் நம்பிக்கையின் காரணம் நீரே
En Nampikkaiyin Kaaranam Neerae
Reenu Kumar
என் நம்பிக்கையின் காரணம் நீரே
என் வாழ்வின் அர்த்தம் நீரே
என்னை ஆளுகை செய்பவர் நீரே
உம்மை புகழ்ந்து பாடிடுவேனே
உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்
ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன்
முதலும் நீரே முடிவும் நீரே
துவங்கியதை முடிப்பவர் நீரே
கடலின் மேலே நடந்து
கரை சேர்ப்பவரும் நீரே
உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்
ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன்
– என் நம்பிக்கையின்
சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
வாக்கு மாறா உத்தமர் நீரே
கூப்பிட்ட நேரத்தில் எல்லாம்
செவிக் கொடுப்பவரும் நீரே
உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்
ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன்
– என் நம்பிக்கையின்