பாடல்
என் கன்மலை நீரே
En Kanmalai Neerae
Reenu Kumar
என் கன்மலை நீரே உம்
கண்ணின் மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே
என் கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவர் நீரே
தோழர்களை செவ்வையாக மாற்றுபவர் நீரே
ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலூயா சொல்லி துதித்திடுவேன்
நெருக்கத்திலே இருந்த என்னை
கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுத்தீர்
நான் உம்மை விட்டு சென்றாலும்
என்னை விடமாட்டீர்
உந்தன் குலம் …. என்றும் பாதுகாப்பீர்
– ஆடிடுவேன்..
புழுதியிலே இருந்து என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினீரே
தள்ளப்பட்ட என்னை நீர்
தலை ஆக்கினீரே
உந்தன் பெயரைத் தந்து உம்
பிள்ளையாக்கினீரே
– ஆடிடுவேன்..