பாடல்
எல்லா மகிமையும் கர்த்தருக்கே
Ellaa Makimaiyum Karththarukkae
Sirkali Yesuprakasam
எல்லா மகிமையும் கர்த்தருக்கே
இங்கே எல்லா மேன்மையும் இறைவனுக்கே
வல்லான் ஆண்டவர் பரம பிதா விண்ணில்
வாழும் உயிர்களின் தந்தைக்கே
வானும் ஒளியும் நிலமும் நீரும்
காற்றும் முதலில் படைத்தாரே
வகை வகையான பயிர்களும்
உயிர்களும் படைத்து பெருகிட விதித்தாரே
ஆதாம் மனிதனை ஏவாள் மங்கையை
அவர் தன் சாயலில் படைத்தாரே
அது முதல் உலகில் மனுகுலம்
பலுகி அருள் வழி நடந்திட விதித்தாரே
– எல்லா
தவறுகள் பாவங்கள் வளர்த்திடும்
சாத்தான் மனுக்களில் கலந்திட கண்டாரே
தன் வழி நடக்கும் தலைமுறை
தழைக்க ஆபிரஹாமை அழைத்தாரே
அவன் வழி உலகில் மனிதரை
எல்லாம் ஆசீர்வதிப்பேன் என்றாரே
அதுமுதல் தூய சான்றோர் தலைமுறை
மீண்டும் நிறைந்திட வகுத்தாரே
– எல்லா