நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அதிகாலை துயில் எழுந்து

Athikaalai Thuyil Elunthu

Moses Rajasekar

அதிகாலை துயில் எழுந்து

ஆண்டவரின் பாதம் பணிந்து

அப்பா அப்பா என்று கூப்பிடுவேன்

குளித்து எண்ணெய் பூசி

தெய்வீக உடையணிந்து

ஜெபக்களம் சென்றிடுவேன் – 2 நான்

ஜெபக்களம் சென்றிடுவேன் – 2

– அதிகாலை

விடியலில் விரைந்தெழுந்து

விண்ணவரின் முகம் காண – 2

கன்மலை மேல் வந்து காத்திருப்பேன்

தேவனின் பாதம் அமர்ந்து

உபவாச தவம் இருந்து

உன்னதர் புகழ் பாடுவேன் – நான்

உன்னதர் புகழ் பாடுவேன் – 2

– அதிகாலை

கடந்திட்ட நாட்கள் எல்லாம்

கரம் தன்னில் தூக்கிக் கொண்டு

சுமந்திட்ட விதம்தனை நினைத்திடுவேன்

இருந்திட இடம் தந்து

அருந்திட உணவு தந்து – (2)

அணிந்திட ஆடை தந்தீரே – என்னை

சுகமுடன் வாழ வைத்தீரே

– அதிகாலை

இனி வரும் நாட்களெல்லாம்

கனிதரும் நல்மரமாய் – (2)

திகழ்ந்திட அருள்புரிந்து வரம் தரணும்

வாழுகின்ற நாட்கள் எல்லாம்

உமக்காகவே வாழ்ந்து – (2)

பரலோகம் வந்து சேரணும் – நான்

பரலோகம் வந்து சேரணும் – 2

– அதிகாலை