பாடல்
அன்று சொன்ன இயேசு வார்த்தை
Antu Sonna Yesu Vaarththai
Sirkali Yesuprakasam
அன்று சொன்ன இயேசு வார்த்தை
இன்று கூட உண்மையே அதை
அவர் பிறந்த நல்ல நாளில்
எண்ண எண்ண நன்மையே
துயரமுற்றோர் பேறு பெற்றோர்
ஆறுதலைக் காணலாம்
தூய உள்ளம் கொண்ட மக்கள்
தேவனையேக் பார்க்கலாம்
நண்பரோடு நட்பு வைக்க
தீயவர்க்கும் தோன்றுமே ஒரு
பகைவன் மீது பாசம் நட்பு
நல்லவர்க்கும் வேண்டுமே என்று
– அன்று
குற்றவாளி கொள்ளையர்கள்
வாழ்வைக்கூட காணுங்கள் தம்
பெற்ற பிள்ளை யாவருக்கும்
நன்மை செய்வார் பாருங்கள்
அனைவருக்கும் தந்தை அந்த
ஆண்டவர் தான் தெரியுமா இங்கு
அவர் கொடுக்கும் நன்மையெல்லாம்
அளந்து காட்ட முடியுமா என்று
– அன்று
ஊசி காதில் ஒட்டகங்கள்
நுழைவதெல்லாம் சுலபமே
பணம் காசால் ஒருவன் கடவுள்
அரசில் நுழைவதென்றால் கடினமே
மரத்தின் தன்மை கனியில் உண்டு
மனிதரெல்லாம் காணுங்கள் உங்கள்
மனத்தின் தன்மை சொல்லில் உண்டு
நல்ல வார்த்தை பேசுங்கள் என்று
– அன்று