பாடல்
அன்புருவான ஆண்டவர் இயேசுவை நான்
Anpuruvaana Aanndavar Yesuvai Naan
Sirkali Yesuprakasam
அன்புருவான ஆண்டவர் இயேசுவை நான்
அனுதினமும் புகழ்ந்து பாடிடுவேன் நான்
அவர் என்னை தேடி வந்தார்
ஆனந்த வாழ்வை தந்தார்
ஆனந்தம் ஆனந்தமே
பாலை நிலமான என்னை
சோலைவனமாக செய்தார்
பாவ வாழ்வில் உழன்ற என்னை
தூய வாழ்வை தொடரச் செய்தார்
புழுவான எனக்கு தன்
புது ரூபம் தந்தார்
அழுகின்ற என் நெஞ்சுக்கு
ஆறுதல் ஈந்தார்
வழிகாட்டி வாழ்விக்க வழியாக வந்தார்
பழி பாவம் இல்லா சத்திய
பாதையை தந்தார் இயேசுவே
என் வாழ்வின் பேரின்பமே
– அன்புருவான
மண்ணுலக மாய வாழ்வில்
மதிமயங்கி அலைந்த என்னை
பொன்னுலக வாழ்வில் சேர்க்கும்
புனித வழி நடக்க செய்தார்
மண்ணான எனக்குத் தன்
மகிமையை தந்தார்
மாறாத மெய்யன்பை
என் மீது பொழிந்தார்
மறு ரூபம் நான் பெறவே
மறு பிறப்பு ஈந்தார்
மகிமை மேல் மகிமை
பெற மாகிருபை தந்தார்
மாதேவன் துதி பாடி
மகிழ்ந்திடுவேன்
– அன்புருவான