பாடல்
அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே
Anpu Koorntha En Kiristhuvinaalae
Fr. S. J. Berchmans
அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து(2)
எனது சார்பில் கிறிஸ்து இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார்
மகனையே தந்தீரைய்யா
மற்ற அனைத்தையும் தருவீரைய்யா
– வேதனை துன்பம்
தெரிந்து கொண்ட உம் மகன் நான்
குற்றம் சாற்ற யார் இயலும்
நீதிமானாய் மாற்றினீரே
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே
– வேதனை துன்பம்
கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
– வேதனை துன்பம்