நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

Anpar Anpai Yaaraal Kooralaam

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

ஆ ஆச்சரியம் அன்பாகவே

இருக்கும் என் நேசர்

அன்பின் உயரம் நீளம் அகலம்

ஆழம் அளக்க யாரால் கூடும்!

அன்பரின் பேரன்பை இங்கு

அழ்காய் கூற யாரால் கூடும்!

எல்லா ஜலமும் மையானாலுமே

அன்பை எழுதிட – எல்லா

மரமும் பேனாவானாலுமே

ஆகாயத்தை தாளாக்கி

அதிலெல்லாம் எழுதினாலும்

அன்பின் அம்சம் எழுதித் தீர்க்க

அன்பர்கள் எங்கு தானுண்டு

– அன்பின் உயரம்

மாந்தர் மேலே பாய்ந்த

அன்பைத்தான் ஆழ்ந்து தூதரும்

பார்ப்பதில் பணிந்து குனிகிறார்

பாவி மேலே பாய்ந்த அன்பு

சாவின் கூரை ஒடித்து வென்றது

என்ன அன்பு என்ன நேசம்

மன்னர் இயேசுவின் மகத்துவ நேசம்!

– அன்பின் உயரம்

ஏழை என்னில் பாய்ந்த அன்பு தான்

ஆ! ஏராளம் ஏழை

என்னால் பகரக்கூடுமோ

அல்லும் பகலும் கூடிப்பாடி

அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன்

அன்பின் இன்பம் ருசித்துப் புசித்து

அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்!

– அன்பின் உயரம்