பாடல்
அன்பே தான் உருவாக வந்தார்
Anpae Thaan Uruvaaka Vanthaar
Sirkali Yesuprakasam
அன்பே தான் உருவாக வந்தார்
அன்பே தான் மொழியாக தந்தார்
அன்பே தான் வழியாக நடந்தார்
இயேசு இயேசு இயேசு
அறவாழ்வு நெறி மீறி அலைகின்ற மனிதன்
அழிக்கின்ற பெரும் பாவம் புரிந்தான்
அது கண்டு பேரன்பு இறை மைந்தன் இயேசு
அருள் செய்ய மனு வேடம் கொண்டார்
– அன்பே
மறை ஞானம் மொழி பேசி பணி யாவும் செய்தார்
மக்கள் தம் பாவம் சுமந்தார்
மறுவாழ்வு நமக்கெல்லாம் தரம் மீட்டுக்கொண்டார்
மனக்கோயில் உறை தெய்வம் ஆனார்
– அன்பே