நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அனாதி அன்பால் அழைத்த தேவா

Anaathi Anpaal Alaiththa Thaevaa

Sirkali Yesuprakasam

அனாதி அன்பால் அழைத்த தேவா

காருண்யத்தாலே என்னை மீட்டீர் அன்பே

ஆனந்தத்தோடே நானும் வந்தேன் அன்பே

ஆ அல்லேலூயா அல்லேலூயா

ஆ அல்லேலூயா அல்லேலூயா

என் மேல் நீர் வைத்த அன்பு

முந்தி வந்ததல்லவோ

நேசம் மரணத்திலும்

வலியதல்லவோ

ஆகையினாலே உந்தன்

அன்பு என்னை வென்றதே

– அனாதி

வேறெந்த அன்பின் இன்பம்

நிலையற்றதல்லவோ

மேகம் போல் மாறிப்போகும்

தன்மையுள்ளதல்லவோ

ஆகையினாலே உந்தன்

அன்பை நான் நம்புவேன்

– அனாதி

அன்பாகவேயிருக்கும்

அன்பின் தேவனல்லவோ

உந்தனின் வார்த்தைகளை

யாரும் மீறலாகுமோ

ஆகையினாலே நானும்

என்றும் கீழ்படிவேன்

– அனாதி