நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்

Alaiththavar Yesu Entum Nadaththuvaar

Sirkali Yesuprakasam

அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்

அஞ்சாதே மகனே அஞ்சாதே மகளே

உலத்தோற்றம் முன்னாலே

உன்னை அறிந்தவர்

உண்மை அன்பு பாசத்தோடு

உன்னை அழைத்தவர்

உன்னை அழைத்தவர்

நன்மை அளிப்பவர்

ஒருபோதும் மறவாமல்

உன்னை தாங்குவார்

– அழைத்தவர்

உன் கண்ணீர் யாவையும் தன்

துருத்தியில் அடைப்பார்

உன் கவலை கஷ்டங்களை

துரத்தியே அடிப்பார்

கண்ணை காத்திடும்

இமையைப் போலவே

உன்னை காப்பாரே

உன்னதர் இயேசு

– அழைத்தவர்