பாடல்
ஐந்து காய வேதனை அன்பர் இயேசுவை வாட்டுதே
Ainthu Kaaya Vaethanai Anpar Yesuvai Vaattuthae
Sirkali Yesuprakasam
ஐந்து காய வேதனை அன்பர்
இயேசுவை வாட்டுதே
ஆறாத சோகம் மாறாத துன்பம்
ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன்
கற்றூணில் கட்டி
கசையடிகள் அடித்தனரே
தலையினிலே குத்தி அவர்
கன்னத்தில் அறைந்தனரே
சிவப்பங்கி உடுத்தி கையில்
கோலினைக் கொடுத்தனரே
யூத ராஜா என்று இகழ்ந்து
முகத்தில் காறி உமிழ்ந்தனரே
– ஐந்து
மன்னவர் இயேசு உடல்
பெரும் புண்ணாகி நொந்ததுவே
மாபெரும் இரத்த வெள்ளம்
பெருகி ஆறாகி பாய்ந்ததுவே
மானிடர் பாவம் தனை மா
தேவன் சுமந்து தீர்த்தார்
மறாவாதே நீ நெஞ்சமே மனம்
திரும்பிடு அவர் தஞ்சமே
– ஐந்து