நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஐந்து காய வேதனை அன்பர் இயேசுவை வாட்டுதே

Ainthu Kaaya Vaethanai Anpar Yesuvai Vaattuthae

Sirkali Yesuprakasam

ஐந்து காய வேதனை அன்பர்

இயேசுவை வாட்டுதே

ஆறாத சோகம் மாறாத துன்பம்

ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன்

கற்றூணில் கட்டி

கசையடிகள் அடித்தனரே

தலையினிலே குத்தி அவர்

கன்னத்தில் அறைந்தனரே

சிவப்பங்கி உடுத்தி கையில்

கோலினைக் கொடுத்தனரே

யூத ராஜா என்று இகழ்ந்து

முகத்தில் காறி உமிழ்ந்தனரே

– ஐந்து

மன்னவர் இயேசு உடல்

பெரும் புண்ணாகி நொந்ததுவே

மாபெரும் இரத்த வெள்ளம்

பெருகி ஆறாகி பாய்ந்ததுவே

மானிடர் பாவம் தனை மா

தேவன் சுமந்து தீர்த்தார்

மறாவாதே நீ நெஞ்சமே மனம்

திரும்பிடு அவர் தஞ்சமே

– ஐந்து