பாடல்
ஏழைகளின் பெலனே
Aelaikalin Pelanae
Fr. S. J. Berchmans
ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயிலினிலே குளிர் நிழலே
கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி உம் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே
– ஏழைகளின்
தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
தடுமாறும் போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்
– ஏழைகளின்