பாடல்
ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு
Aaviyaanavar Namakkullae Vaasam Seyvatharku
Wesley Maxwell
ஆவியானவர் நமக்குள்ளே
வாசம் செய்வதற்கு
அந்நிய பாஷை மட்டும் தான்
அடையாளமா
அன்பு வேண்டாமா
பரிசுத்தம் வேண்டாமா
உண்மை வேண்டாமா
தேவ பயம் வேண்டாமா
திருச்சபையே மணவாட்டியே
இயேசு வருகிறார் நீ ஆயத்தமா
பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான்
ஆவியானவரின் தூய்மையான கிரியை
– திருச்சபையே
குறைகூறி திரியாமல் தன்
பிழைகளை உணர்ந்திடவே
உணர்த்தி விடுவது தான்
ஆவியானவரின் கிரியை
– திருச்சபையே
துரோகம் செய்தவரை மன்னித்திட நம்மை
தூண்டிவிடுவதுதான்
ஆவியானவரின் கிரியை
– திருச்சபையே
சாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திட
உந்தித்தள்ளுவது தான்
ஆவியானவரின் கிரியை
– திருச்சபையே