பாடல்
ஆத்துமாவே நன்றி சொல்லு
Aaththumaavae Nanti Sollu
Fr. S. J. Berchmans
Key
C
Tempo
72
Time
3/4
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே - 2
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே - 2
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் - நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை - 2 - நாம்
கர்த்தர் தம் வழிகளெல்லாம்
மோசேக்கு வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார்
அவரது பேரன்பு
வானளவு உயர்ந்துள்ளது
கிழக்கு மேற்கு தூரம்போல நம்
குற்றங்கள் அகற்றிவிட்டார்