பாடல்
ஆராய்ந்து பாரும் தேவனே
Aaraaynthu Paarum Thaevanae
ஆராய்ந்து பாரும் தேவனே
என்னை நீர் அறிவீர்
புதிதும் ஜீவனுமான பாதையில்
ஓடச் செய்யும்
உம் வார்த்தை கேட்டிடாமல்
குற்றங்கள் பல செய்தேன்
கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய்
என்னிலே வெளிச்சம் காட்டிடுமே
– ஆராய்ந்து
மார்த்தாளைப் போலிருந்தேன்
வீணாக உழைத்திட்டேன் நான்
தேவை ஒன்றே அதை நான் அறிந்தேன்
பாதத்தில் இருக்க கற்றுக்கொண்டேன்
– ஆராய்ந்து
வீண் வார்த்தை என் வாயினால்
நினைக்காமல் பேசுகின்றேன்
என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும்
என் தூய வாழ்வை காத்துக்கொள்ள
– ஆராய்ந்து
உம் தூய ஆவியாலே
துர் ஆசை நீங்கச்செய்யும்
உண்மை மனசாட்சி என்னில் உண்டாக
உணர்வுள்ள இதயத்தை தந்தருளும்
– ஆராய்ந்து
சுயம் என்னில் சாக வேண்டும்
நீர் என்னில் பெருக வேண்டும்
என் சித்தம் விரும்பேன என்னையே பலியாய்
தந்தேன் உம் சேவை செய்திடவே!
– ஆராய்ந்து