பாடல்
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு தானே
Aaraathanai Aaraathanai Aaraathanai Umakku Thaanae
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு தானே (2)
உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் துடிக்குதே
உம் முகத்தை பார்க்கணும் உம்மோடு இணையணும்
நீர் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கிறேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கிறேன்
எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும்
உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும் –
– உள்ளமும் ஏங்கிடுதே
என் ஆசை நீர் தானே நீர் இன்றி நானில்லை
உம் அன்பை விட்டு என்னால்
எங்கு செல்ல கூடுமோ
நீரே என் நம்பிக்கை நீரே என் ஆதரவு
உம் சமூகம் போதும் அதுவே என் ஆனந்தம்
– உள்ளமும் ஏங்கிடுதே