நேசிக்கிறேன்
← திரும்பு
snippets

வார்த்தையே நம்முடைய வாழ்க்கை

Jenophene Abraham

ஒரு ஊருல ஒரு குருடன் தர்மம் எடுத்து வாழ்ந்து வந்தார். எப்போதும் அவர் தர்மம் எடுக்கும்போது அருகில் "நான் ஒரு குருடன் எனக்கு உதவி செய்யுங்கள்" என்ற ஒரு பலகை வைதிருப்பார். அந்த வழியாக செல்லுவோர் அவருக்கு தர்மம் கொடுப்பார்கள். ஒரு நாள் அவ்வழியே வந்த ஒருவர் அந்த பலகை எடுத்து பழைய வாக்கியத்தை அழித்து விட்டு புதியதாக சில வரிகள் எழுதி வைத்து விட்டு சென்றார். பின்பு அந்த வழியாக சென்றோர் அவருக்கு அதிகமாக தர்மம் கொடுத்தததா்கள். ஒரு நாள் அவ்வழியே சென்ற ஒருவரை அந்த குருடர் இதில் என்ன வரிகள் எழுதி உள்ளது என்று கேட்டார் "இன்று ஒரு அழகான நாள் ஆனால் என்னால் பார்க்க முடியாது" என்று கூறி சென்றார். வார்த்தை நம்முடைய வாழ்க்கையை மாற்றுகிறது. வார்த்தை நம்முடைய உலகத்தை மாற்றுகிறது.

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.