எங்கு சென்றாலும் சந்தோஷமே
ஒரு வயதான தாயார் ஒரு சமயம் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது, பெரும் புயல் ஒன்று கப்பலை தாக்கிற்று. அப்போதும் அந்த தாயார் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாடலை பாடிக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் ஓடி வந்து அந்த தாயாரிடம் அம்மா உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று கேட்டார். அப்போது அந்த தாயார் கப்பல் பத்திரமாக கரைக்கு சென்றால் நான் என்னுடைய சின்ன மகள் வீட்டுக்கு சென்று சந்தோஷமாக என் பொழுதை கழிப்பேன். இல்லையென்றல் என் பெரிய மகள் வீட்டிற்க்கு சென்று மிகுந்த மகிழ்ச்சியுடம் இருப்பேன் ஏனென்றல் என் பெரிய மகள் எனக்கு முன்பாகவே இயேசுவை காண சென்று விட்டால் ஆகவே நானும் சென்று மகிழுவேன் என் நேசருடன்.
எழுதியவர்
Jenophene Abraham
கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.