நம்பிக்கை
ஒரு இளைஞன் ஒருவன் ஒரு பெரிய மலை மீது நின்றுக்கொண்டு ஆண்டவரின் படைப்புகளை பார்த்து தேவனை துதித்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது அந்த மலை உடைந்து விழுந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அவன் எதிர் திசையில் ஓடி மலையின் மற்றொரு முனையை அடைந்த போது மற்றுமொரு அதிர்ச்சி அவனுக்கு காத்திருந்தது, அவனுக்கு முன்பாக இருந்தது அகல பாதளம். சற்றும் எதிப்பாரத சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட அந்த இளைஞன் கடவுளே என்னை காப்பாற்றும் என சத்தமிட தொடங்கினான். திடீரென வானத்திலிருந்து "கீழே குதி" என்ற ஒரு சத்தத்தை கேட்டான் அந்த இளைஞன். அது கடவுளின் குரல் என்று நிச்சயமாக நம்பினான். கீழே குதித்தால் இறப்பு நிச்சயம் என்றாலும் கடவுளை நம்பி கீழே குதித்தான். மலையிலிருந்து கீழே இறங்க உதவும் படிக்கட்டுகள் மிக அருகில் இருந்ததால் காயம் கூட எதுவும் படவில்லை. கர்த்தரை நம்பினோர் கைவிடப்படுவதில்லை.
எழுதியவர்
Jenophene Abraham
கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.